சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஏற்காட்டில்  மலர் கண்காட்சியை காண குவிந்த சுற்றுலாப் பயணிகள்

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இரண்டு நாள் மலர் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, மலர்

News image
Updated On :7 ஜூன் 2015, 3:01 pm

ஜான் பாஸ்கோ

சேலம் மாவட்டம், ஏற்காட்டில் இரண்டு நாள் மலர் கண்காட்சி சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. விடுமுறை நாளான இன்று ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அண்ணா பூங்கா, மலர் கண்காட்சி திடலில் குவிந்தனர்.

ஏற்காட்டில் 40 வது மலர் கண்காட்சி மாவட்ட நிர்வாகம் தோட்டக் கலைதுறையின் மூலம் குறுகிய நாட்களில் மலர் கண்காட்சியை ஏற்பாடு செய்த நிலையில் மலர் கண்காட்சியில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட இந்தியா கேட், காண்டாமிருகம் கொக்கு. மற்றும் யானை உள்ளிட்டவைகள் சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் அமைந்திருந்தன. கடந்த இரண்டு நாட்களில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மலர் கண்காட்சி கண்டு மகிழ்ந்ததாகவும், இதனால் ரூ 3 லட்சம் அரசுக்கு வருவாய் கிடைத்ததாகவும் தோட்டக்கலை துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.